ஒரு வரலாற்றுப்பதிவு

ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வெளியாகியுள்ள இந்த நிலையில், இந்தத் தேர்தலை முன்னின்று நடாத்திய தேர்தல் குழுவிற்கு முதற்கண் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்க் கொள்கின்றேன்.

பக்கசார்பற்று, நடுநிலையாக அவர்கள் நாள், நேரம் பாராது ஆற்றிய கடமையானது பாராட்டுக்களுக்கும், நன்றிகளுக்கும் உரித்தானது.

இந்தத்தேர்தல் ஒரு வரலாற்றுப்பதிவு.

தமிழர்கள் இலங்கைத் தீவுக்கு வெளியே, வேறு ஒரு நாட்டில், நாடளாவிய ரீதியில் நடத்திய முதல் தேர்தல் இது.

மே 2009 இல் ஆயுதப்போராட்டம் மிகக் கொடூரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் உருவான அரசியல் இடைவெளி நிரப்பப்படவேண்டிய நிர்ப்பந்தம், உலக அரங்கில், தமிழர் மத்தியில் பெரிய மாற்றங்களை உருவாக்கியுள்ளது.

நாடுகள் தோறும் அவைகள் அமைத்து, தேசியத்தைக் கட்டிக்காக்கவும், வளர்க்கவும், இனத்தின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கவும், அந்தந்த நாடுகளின் சட்ட வரைமுறைகளுக்கமைய பணியாற்றுவது, இன்றைய காலத்தின் கட்டாயம்.

மொழிவழுவாது தமிழர்களின் உரிமைகளை அறைகூறிய வட்டுக்கோட்டைத்தீர்மானதை மீளுரைத்து, மேல் நகரும் தேசியப்பயணம், நோர்வேயில் தமிழர் அவையாக, அஞ்சல் கட்டை கைமாற்றம் நிகழ்ந்துள்ளது.

உலகத்தமிழருக்கெல்லாம் முதுகெலும்பாக நோர்வேத்தமிழர் இன்று நிமிர்ந்து நிற்கின்றார்கள்.

தேசம் தேடும் மக்களுக்கெல்லாம் முன்னோடியாக நோர்வே தமிழர் அவை அமைந்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் என்னைத் தேர்ந்தெடுத்த ஈழத்தமிழர் அவைகளுக்கு நன்றியைத் தெரிவித்து, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்து, கருத்துக்களை உள்வாங்கி, கொள்கைகளை நிறைவேற்றுபவனாக நான் இருப்பேன் என்று உறுதி கூறிக்கொள்கின்றேன்.

வட்டுக்கோட்டைத் தீர்மானமும் நோர்வே தமிழர் அவையும்

ஒரு மனிதனுடைய உரிமைகள் எல்லாம் ஏற்கனவே ஐநா சபையால் வரையறுக்கப் பட்டுள்ளன.

நான் சுதாகர் என்பதை எவ்வாறு மறுக்க முடியாதோ, அதே போன்று ஈழத் தமிழர்களையும் , அவர்கள் ஒரு தேசிய இனம் என்பதையும் மறுக்க முடியாது.

நான் உயிர் வாழ்வதற்கு, உண்பதற்கு, உடை உடுப்பதற்கு, வீடு கட்டுவதற்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே போன்று ஈழத்தமிழர் தேசிய இனமாக வாழ, இறைமையும் சுதந்திரமும் உள்ள தமிழீழத் தனியரசை நிறுவதற்கும் உரிமை உண்டு.

நான் உரிமைகளுடன் வாழ சுதந்திரம் இல்யென்றால் அதை போராடிப் பெறவும் எனக்கு உரிமை உண்டு. அதேபோல் ஈழத்தமிழர் போராடவும் உரிமை உண்டு. போராட்டம் ஐனநாயக முறையாக இருக்கலாம், அல்லது ஆயுதப்போராட்டமாக இருக்கலாம்.

என்னுடய உரிமையான உணவு உண்ணுதலை மறுக்கும் அரசாங்கத்திடமோ, அல்லது அயல் நாடுகளிடமோ நான் பேச்சுவார்த்தைக்குப் போய், மூன்று நேரம் இல்லவிட்டால் ஒரு நேரமாவது என்னை உண்ணவிடுங்கள் என்று கெஞ்சலாம். ஆனால் உண்ணுவது என்னுடைய உரிமை என்பதை மறந்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் போகமுடியாது!!

நான் உரிமைகளுடன் வழ்வதை மனிதாபிமானமில்லாத உலகம் மறுக்கலாம். ஆனால் நான் அதை மறந்தால், அது நானே என்னை அடிமை என்று ஏற்றுக்கொள்வதையும், என்னுடைய சிந்தனைகள் அடிமைத்தனமானவை என்பதையும் தான் சுட்டிக்காட்டும்.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் இதைத்தான் சொல்கிறது. இதுதான் நாம் அடிமைகள் இல்லை என்பதை உலகுக்கும், எமக்கும் சொல்லிக் கொள்ளும் முறை.

ஈழத்தமிழர்களுக்கு இறமையுள்ள அரசு அமைக்கச் சுதந்திரம் இல்லாவிட்டாலும் அதை அமைக்கும் உரிமை உண்டு. வட்டுக்கோட்டைத் தீர்மானம் தவிர்ந்த எந்தக் குறைவான அடிப்படையிலும் நாம் பேச்சு வார்த்தைக்குப் போவோமானால், நாமே நம்மை அடிமைகளாக ஏற்றுக்கொள்வதாகத்தான் இருகும்!

இதன்மூலம் நாம் சிந்தனையிலேயே அடிமைகளாகிவிட்டோம் என்பதைத்தான் உறுதிப்படுத்துவோம். தன்னையும் தன்னுடைய உரிமைகளையும் சரிவரப் புரிந்து கொண்டவனுக்கு நோர்வே தமிழர் அவை தான் அவை! மற்றவை எல்லாம் சபை!

நாடுகடந்த ஈழம்

நாடுகடந்த ஈழம் என்பது ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு. எந்த ஒரு நாடும் இந்த வகையில் அமையவும் இல்லை, இப்படியான ஒரு முறையில் முன்னெடுக்கப்படவும் இல்லை.

ஈழத்தமிழராகிய நாம் இன்று ஒரு சரித்திரம் படைக்கும் மக்களாக மாறியுள்ளோம். நூற்றாண்டுகளாகத் தொடரும் அடக்குமுறை எம்மக்களை அகதிகளாக்கி உலகெங்கும் பரவச்செய்தது.

எமது வரும்காலத்தை தொலை நோக்குடன் பார்த்தோமேயானால், நாம் எப்போதும் இப்படியே உலகெங்கும் பரந்த இனமாகத்தான் இருக்கப்போகிறோம்.
ஒரு நாடு என்பது ஒரு இன மக்கள் வாழும், புவியியல் பிரதேசமாக இல்லாமல், பல இன மக்களும் வாழும் ஒரு புவியியல் பிரதேசமாகவே பெரும்பாலும் காணப்படுகிறது.

ஆகவே நாடு என்ற சொற்பதத்தை எம்முடைய இந்த புதிய நிலைக்குப் பொருந்துமாறு மாற்றினால், ஈழம் என்பது ஒரு புவியியல் பிரதேசத்துக்கு மட்டும் உட்படாமல், மக்களை மட்டும் சார்ந்து, உலகெங்கும் தமிழர் வாழும் பிரதேசங்கள் எல்லாம் சேர்ந்தது ஈழம் ஆகிறது.

தமிழர் வாழும் இடம் எல்லாம் ஈழம் என்று பார்த்தால், ஈழம் இன்று இலங்கைத்தீவுக்கு வெளியே பரந்து, நீண்டு, பல உலக நாடுகளையும் தொட்டுச் செல்கிறது.

பொதுவாக நாடு என்பது ஒரு புவியியல் பிரதேசத்தில் வாழும் மக்களையும் அவர்களின் வளங்களையும், உரிமைகளையும் அடிப்படையாகக் கொண்டது.
அரசாங்கம் என்பது மக்களால், மக்களின் நலனைக்காக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும், மேலும் வளர்க்கவுமென அமைக்கப்படுவது.

ஆகவே நாடுகடந்த ஈழம் என்பது, தமிழ் மக்கள் வாழும் இடமெல்லாம் அவர்களையும், அவர்களின் வளங்களையும், முன்னேற்றத்தையும் அடிப்படையாகக்கொண்டது.

தமிழீழ அரசாங்கமும் இலங்கைத்தீவில் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் வளங்களைப் பாதுகாக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடவேண்டும்.

வளங்கள் என்னும்போது, இயற்கை வளங்கள், பொருளாதாரம், சமூகத்தின் கூட்டுமொத்த அறிவு என்பன உட்படும். தமிழரின் இயற்கை வளங்கள் இலங்கைத்தீவில் தமிழரின் கட்டுப்பாட்டில் இல்லை. இயற்கை வளங்கள் ஒரு நாள் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கையுடன் நான் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும்.

புலம்பெயர் வாழ்க்கை எம்முடைய சில வளங்களைச் சிதைத்தாலும், பொருளாதாரம், கல்வி போன்ற சில பகுதிகளை முன்னேற்ற வழிசமைத்துள்ளது. இந்த வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்தி மேன்மேலும் முன்னேற வழிசெய்யவேண்டும்.

நாம் வாழும் நாடுகளின் பொருளாதார, அரசியல் அமைப்புக்களைப் பொறுத்து அங்கங்கு குடியேறும் வெளிநாட்டவர்களின் முன்னேற்றம் அமைகிறது. நோர்வே போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் வேறுபாடின்றி முன்னேற சகல வாய்ப்புக்களும் உள்ளது. இங்கு அமைக்கப்படும் தமிழர் அவை இந்த வாய்ப்புக்களை அதிகளவு பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும்.

புலம்பெயர் வாழ்க்கை பண்பாட்டு விழுமியங்களை அழித்துவிடாமல் பாதுகாப்பது அந்தந்த நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளின் கடமை. தமிழ்ச்சங்கங்கள், பாடசாலைகள், சமய அமைப்புக்கள் என்பன இதுவரை மிகப்பெரிய சேவையை ஆற்றி வந்துள்ளன.

இனி இவற்றுக்கெல்லாம் தாய் அமைப்பாக அமையப்போகும் நோர்வே தமிழர் அமை இந்தப்பணிகளை ஒருங்கிணைத்து, உலக அளவில் கோர்த்து முன்னெடுக்கும்.

கல்வி, சுகாதாரம், குழந்தைகள்-, இளையோர்-, முதியோர் விவகாரம், போக்குவரத்து, குடிவரவு/குடியகல்வு, பொருளாதாரம், பணப்புழக்கம், உற்பத்தி, கைத்தொழில், நீதி, சமயம், தொழில், தொலைத்தொடர்பு, வெளிநாட்டுத்தொடர்பு என சகல துறைகளிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவற்காக, மந்திரிசபைகளை அமைத்து, ஆய்வுகளை நடத்தி, ஆய்வன செய்யவேண்டும்.

அரசாங்கம் மக்களிற்காகவே அன்றி, மக்கள் அரசாங்கத்திற்காக அல்ல. மக்கள் இருக்கும் இடத்தில் தான் அரசாங்கம் அமைய வேண்டுமே தவிர, அரசாங்கம் இருக்கும் இடத்திற்கு மக்களை நகர்த்த முடியாது!

Choosing our leaders

We, the people of Tamil Eelam are at a historical point in continuing our struggle for freedom.

The path we are going to choose will be democratic and non-violent.

This is historic because this is the first time our struggle will be fought from a diaspora platform.

We have seen many leaders and representatives who were selected and elected, tried to convey our views and wishes to the world to justify our need for freedom.

Many of them died doing this historical task. Many of them gave up and joined the slave masters, leaving a dark patch in our history.

Our sincere thanks go to those till now fighting for this pure goal. We salute in great honour to the freedom fighters who have braved their lives to save our land.

Now, we are awaiting elections to cast our votes to elect our future leaders and representatives. We are going to put our trust in them to bring our views and wishes to the world and to lead us into the right path.

How can we be sure that these persons will not surrender the goal to the suppressers?

We have learned the lessons of freedom from the great leaders like Moses, Jesus, Mohammed, Mahatma Gandhi, Jinnah, Nelson Mandela, Dalai Lama, Aung Sung Sochi and more of that kind.

What is happening in this world now? Leaders like Dalai Lama and Aung Sung Sochi are in exile or in prison. Who is leading the world now? Can these leaders ever be compared to those selfless spiritual personalities?

Today’s world leaders have created the theories of Machiavellian and counter insurgencies which have killed millions of humans. We don’t see even the least respect for human lives.

Once we heard stories about leaders who punished them selves for unbalance leadership in their country.

We can remember Chibby Chakaravarthy. He gave his own flesh to the pigeon which complained to the king of inequality in his leadership.

Great poet Bharathiar wrote, “We will destroy the world if one person is hungry”.

Do we see any leaders of this kind in this present world actually leading the people?

How can a president sit for gala dinner when people in his country are wondering over the garbage depots to find food?

If we ask this question people will laugh, why? Nobody believe that a president who have spent millions to get to that position to think of the people and make a promise that he will not eat until all the people in his country is fed, isn’t it?

Another thing we can easily see is the leaders how rich they are. Many of them are business people. They have used their wealth to become leaders. Do we really believe these leaders will treat all people equally? Do we really believe these representatives will represent anything other than what gave them the position?

Money is one of the evils which have destroyed many lives. We all know that greed has no limit!

I hope we have learned from our mistakes and others mistakes in electing leaders and representatives who only represent themselves and their own values. Or, the lessons of electing people who are weak in their determination that they can easily shaken by the negative powers.

I hope we will have the choice of selfless and anti materialistic people standing in the coming elections.

I personally believe that we can identify a dedicated leader from the charisma, his simple life style and spiritual insight who have understood the inalienable right to self determination and total freedom of the Tamil nation.

 As, the great leader Dalai Lama puts it, we are asking for freedom not only for our people, we ask for the freedom to the air we breath, the water we drink, the land we cultivate, our trees and bushes, pets and animals and in all to our thoughts!

ஒற்றுமையின் பெயரால் வேற்றுமையை அழிக்க முடியாது.

ஒற்றுமையும் வேற்றுமையும் இன்றி சமூகங்கள் இயங்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனும் வித்தியாசமானவர்கள்.

தனி மனிதர்கள் இணைந்து குடும்பங்கள் உருவாவது போல, சமூகங்கள் உருவாவது போல, நாடுகள் உருவாவது போல, உலகம் உள்ளது.

நாம் ஒரு வேறு நாட்டவரைச் சந்திக்கும்போது அவருடைய தோற்றத்தை வைத்து அவர் வேறு மொழி பேசுபவர், வேறு நடை, உடை, பாவனை உள்ளவர் என்று வைத்துக்கொண்டு அணுகுகின்றோம். இது வேற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டது.

ஆனால் நாம் நம்மவரைப் பார்க்கும் போது அவர் தமிழ் பேசுபவர், நம்மைப் போன்ற நடை, உடை, பாவனை உள்ளவர் என்று, ஒற்றுமையின் அடிப்படையில் அணுகுகின்றோம்.

இந்த இரண்டு அணுகுமுறையும் நல்லவைதான். இது ஒவ்வொருவருடைய தனித்துவத்தையும் மதித்து, ஏற்றுக்கொள்வதாக விளங்கிக்கொள்ளப்படும்.

ஒவ்வொரு தனிமனிதரும் சொந்தமாகச் சிந்திக்கின்றார். எண்ணங்கள் சிந்தனைகளாக, கருத்துக்களாக, கொள்கைகளாக உருவெடுக்கின்றன. ஆகவே மனிதரின் எண்ணிக்கைக்கேற்ப, கோடிக்கணக்கான எண்ணங்களும், கருத்துக்களும், கொள்கைகளும் இருப்பதாகக் கொள்ளலாம்.

வித்தியாசங்கள் அவசியமானவை. அவை புதிய சிந்தனைகளுக்கு வழிகோலுபவை. புதிய எண்ணக்கருத்துக்களை உருவாக்குவவை. புதிய கொள்கைகளை வகுப்பவை. வித்தியாசங்கள் ஒரு சமூகத்தின் பன்முகத்தன்மையைக் காட்டும். அதன் ஆக்க சக்தியை வெளிக்கொண்டுவரும்.

ஒற்றுமையின் பெயரால் மக்களின் சிந்தனைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க முடியாது. ஒற்றுமையின் பெயரால் வேற்றுமையை அழிக்க முடியாது.

குழந்தைப் பருவத்திலிருந்து மனிதர் முதிரும் போது சிறிது சிறிதாக தமக்கென்று ஒரு அடையாளத்தை எல்லா தனிமனிதரும் உருவாக்கிக் கொள்கிறோம். இன்னாரின் மகன் என்றும், மகள் என்றும் அடையாளப் படுத்தப்பட்ட நாம், இன்னாரின் தந்தை என்று எமது பெற்றோரே அடையாளப்படுத்தப்படும் அளவிற்கு தனித்துவம் மிக்க மனிதனாக உருவாகின்றோம்.

இளமைப் பருவத்தில் எம்மை வித்தியாசமாகக் காட்டிக்கொள்வதற்காக எப்படியெல்லாம் முயற்சி செய்தோம். இந்த ஊக்கம் நாம் பெரியவர்களானதும் எம்மை விட்டுப் போய்விடுகிறதா? வயதுக்கும், முதிர்ச்சிக்கும் ஏற்ப எம்முடைய தனித்துவத்தைப் பேணும் அதேவேளை சமூகத்தின் நன்மைகளையும் பாதுகாக்கும் பொறுப்பு மிக்கவர்களாக மாறிவிடுகின்றோம்.

பிற சமூகங்கள் எம்மை விட ஒற்றுமையானவை என்று சொல்லமுடியாது தானே? அவர்களும் சமூக ஒற்றுமையைப் பாதுகாக்கும் அதேவேளை தனித்துவத்தையும் பேணுகிறார்கள் தானே.

நாம் வாழும் நாட்டில் ஒரே ஒரு கட்சி தான் உள்ளதா?
பல கட்சிகள், பல கொள்கைகள், பலவிதமான அமைப்புக்கள் என பன்முகப்படுத்தப்பட்ட சமூகங்களில் தானே நாம் வாழ்கிறோம்.

அதேபோல் எமது சமூகமும் பன்முகப்படுத்தப்பட்டதாக அமைய வேண்டாமா? அப்படியானால் நாமும் எம்முடைய மக்களின் பலவிதமான சிந்தனைகளுக்கும் இடம் கொடுக்கும் அமைப்புக்களை உருவாக்க வேண்டும் தானே.

ஒவ்வொரு தனிமனிதனுடைய தனித்துவத்தையும் அறிந்து, மதித்து, வரவேற்று, மேலும் வலுவடையச்செய்ய பரந்த எண்ணம் கொண்ட மக்கள் சமூகத்தலைவர்களாக வரவேண்டும்.

வேற்றுமை என்பது ஒற்றுமைக்கு எதிர்மறையானது அல்ல. ஒற்றுமையின் ஒரு பகுதிதான் வேற்றுமை!